Search
Latest topics
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
செட்டிநாடு சிக்கன்
Page 1 of 1
செட்டிநாடு சிக்கன்
தேவையான பொருட்கள்:
சிக்கன் டிரம்ஸ்டிக் – 5
வறுத்து மசால் அரைக்க:
மஞ்சள்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1 டீ ஸ்பூன்
சீரகம் – 1 1/2 டீ ஸ்பூன்
இஞ்சி – 1 அங்குலத் துண்டு
பூண்டு – 4 பல்
மிளகாய் வத்தல் – 12
தனியா (கொத்தமல்லி விதை) – 1 டீ ஸ்பூன்
கிரேவி – கூட்டு சேர்க்க:
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2 (பெரியது)
தேங்காய்ப்பால் – 1 1/2 கப்
தாளிக்க:
பிரியாணி இலை – 2
பட்டை – 1 சிறிய துண்டு
கிராம்பு – 2
அன்னாச்சி பூ – 1
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விடாமல் இளஞ்சூட்டில் மஞ்சள்தூளை லேசாக வறுக்கவும்.
மிளகையும், சீரகத்தையும் ஒன்றாகச் சேர்த்து எண்ணெய் விடாமல் லேசாக வறுத்துக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுப் பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
கொத்தமல்லி விதை, மிளகாய் வத்தலை எண்ணெய் விடாமல் வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ளவும்.
இதுவரை வறுத்த எல்லா பொருட்களையும் மிக்ஸியில் போட்டு லேசாக தண்ணீர் விட்டு விழுது போல் மசாலாக அரைத்துக் கொள்ளவும்.
தேங்காயைத் துருவி, தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டிப் பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பெரிய கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். சூடான எண்ணையில் தாளிப்பதற்கென கொடுத்துள்ள பொருட்களை (பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, அன்னாச்சி பூ) சேர்த்து தாளிக்கவும். தாளித்த பொருட்களை உடனே எண்ணெய்யில் இருந்து அரித்து அகற்றவும்.
நறுக்கிய வெங்காயத்தை கடாயில் போட்டு பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
இதனுடன் அரைத்த மசாலைச் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.
பின் இதனுடன் தேங்காய்ப்பால், ஒரு கப் தண்ணீர் சேர்த்து 10-15 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க வைக்கவும்.
தேங்காய்ப்பாலின் பச்சை வாடை மடங்கி வரும் போது அதனுடன் சிக்கனைச் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
சிக்கன் நன்கு வெந்து, கிரேவி நல்ல கெட்டியான கூட்டுப் பதத்திற்கு வந்த பின் தேவையான அளவு உப்பைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
இந்த சிக்கனை இட்லி, தோசை மற்றும் சாதத்துடன் சூடாக பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.
குறிப்பு:
நல்ல பழுத்த சிவப்பு தக்காளியை பயன்படுத்திச் செய்ய கூட்டின் நிறமும், சுவையும் கூடும்.
தக்காளியை நறுக்கி மிக்ஸியில் விழுதாக அரைத்துச் சேர்க்க, தக்காளி எளிதில் வதங்கி விடும். நேரத்தை மிச்சப்படுத்துவதோடு நல்ல திக்கான கூட்டு (gravy) கிடைக்கும்.
சிக்கன் டிரம்ஸ்டிக் – 5
வறுத்து மசால் அரைக்க:
மஞ்சள்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1 டீ ஸ்பூன்
சீரகம் – 1 1/2 டீ ஸ்பூன்
இஞ்சி – 1 அங்குலத் துண்டு
பூண்டு – 4 பல்
மிளகாய் வத்தல் – 12
தனியா (கொத்தமல்லி விதை) – 1 டீ ஸ்பூன்
கிரேவி – கூட்டு சேர்க்க:
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2 (பெரியது)
தேங்காய்ப்பால் – 1 1/2 கப்
தாளிக்க:
பிரியாணி இலை – 2
பட்டை – 1 சிறிய துண்டு
கிராம்பு – 2
அன்னாச்சி பூ – 1
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விடாமல் இளஞ்சூட்டில் மஞ்சள்தூளை லேசாக வறுக்கவும்.
மிளகையும், சீரகத்தையும் ஒன்றாகச் சேர்த்து எண்ணெய் விடாமல் லேசாக வறுத்துக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுப் பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
கொத்தமல்லி விதை, மிளகாய் வத்தலை எண்ணெய் விடாமல் வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ளவும்.
இதுவரை வறுத்த எல்லா பொருட்களையும் மிக்ஸியில் போட்டு லேசாக தண்ணீர் விட்டு விழுது போல் மசாலாக அரைத்துக் கொள்ளவும்.
தேங்காயைத் துருவி, தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டிப் பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பெரிய கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். சூடான எண்ணையில் தாளிப்பதற்கென கொடுத்துள்ள பொருட்களை (பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, அன்னாச்சி பூ) சேர்த்து தாளிக்கவும். தாளித்த பொருட்களை உடனே எண்ணெய்யில் இருந்து அரித்து அகற்றவும்.
நறுக்கிய வெங்காயத்தை கடாயில் போட்டு பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
இதனுடன் அரைத்த மசாலைச் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.
பின் இதனுடன் தேங்காய்ப்பால், ஒரு கப் தண்ணீர் சேர்த்து 10-15 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க வைக்கவும்.
தேங்காய்ப்பாலின் பச்சை வாடை மடங்கி வரும் போது அதனுடன் சிக்கனைச் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
சிக்கன் நன்கு வெந்து, கிரேவி நல்ல கெட்டியான கூட்டுப் பதத்திற்கு வந்த பின் தேவையான அளவு உப்பைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
இந்த சிக்கனை இட்லி, தோசை மற்றும் சாதத்துடன் சூடாக பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.
குறிப்பு:
நல்ல பழுத்த சிவப்பு தக்காளியை பயன்படுத்திச் செய்ய கூட்டின் நிறமும், சுவையும் கூடும்.
தக்காளியை நறுக்கி மிக்ஸியில் விழுதாக அரைத்துச் சேர்க்க, தக்காளி எளிதில் வதங்கி விடும். நேரத்தை மிச்சப்படுத்துவதோடு நல்ல திக்கான கூட்டு (gravy) கிடைக்கும்.
birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha