Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
இந்திய மசாலாப் பொருட்களின் மகிமை ! EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
இந்திய மசாலாப் பொருட்களின் மகிமை ! EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
இந்திய மசாலாப் பொருட்களின் மகிமை ! EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
இந்திய மசாலாப் பொருட்களின் மகிமை ! EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
இந்திய மசாலாப் பொருட்களின் மகிமை ! EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
இந்திய மசாலாப் பொருட்களின் மகிமை ! EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
இந்திய மசாலாப் பொருட்களின் மகிமை ! EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
இந்திய மசாலாப் பொருட்களின் மகிமை ! EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
இந்திய மசாலாப் பொருட்களின் மகிமை ! EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
இந்திய மசாலாப் பொருட்களின் மகிமை ! Vote_lcapஇந்திய மசாலாப் பொருட்களின் மகிமை ! Voting_barஇந்திய மசாலாப் பொருட்களின் மகிமை ! Vote_rcap 
Admin
இந்திய மசாலாப் பொருட்களின் மகிமை ! Vote_lcapஇந்திய மசாலாப் பொருட்களின் மகிமை ! Voting_barஇந்திய மசாலாப் பொருட்களின் மகிமை ! Vote_rcap 


இந்திய மசாலாப் பொருட்களின் மகிமை !

Go down

இந்திய மசாலாப் பொருட்களின் மகிமை ! Empty இந்திய மசாலாப் பொருட்களின் மகிமை !

Post by birundha Tue May 27, 2014 4:04 pm


இந்திய உணவு பொருட்களில், உணவின் சுவைக்காக பெரும்பாலும் மசாலா பொருட்கள் சேர்க்கப்படுகின்றன, இப்படி சேர்க்கப்படும் மசாலா பொருட்களின் பட்டியலையும் அவற்றின் பயன்கள் பற்றியும் இங்கு காண்போம்.

சீரகம் :

இந்திய உணவுகளில் பெரும்பாலும் சீரகம் சேர்க்காமல் சமைக்கமாட்டார்கள். சீரகம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் ஒரு பொருள். அதுமட்டுமின்றி, இது செரிமானப் பிரச்சனை, இருமல், பைல்ஸ் மற்றும் அதிகமான இரத்த அழுத்தம் போன்றவற்றை குணப்படுத்துகிறது.

மிளகு :

மிளகு உணவுக்கு சுவையையும், காரத்தையும் கொடுப்பதோடு மட்டுமில்லாமல் உடலில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உற்பத்தியை அதிகரித்து, செரிமானத்திற்கு பெரிதும் துணைபுரிகிறது. மேலும் இருமல், தொண்டை கரகரப்பு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டாலும், மிளகு ஒரு நல்ல தீர்வைத் தரும்.

பட்டை :

பொதுவாக பட்டையை நறுமணத்திற்காக குழம்பு, புலாவ், பிரியாணி போன்றவற்றில் பயன்படுத்துவார்கள். இந்த பொருள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதனை அவர்கள் சாப்பிட்டால், அளவுக்கு அதிகமாக இன்சுலின் சுரப்பதை தடுத்து, தேவையான அளவை மட்டும் சுரக்கும். மேலும் இதனை சாப்பிட்டால், செரிமான பிரச்சனை, இருமல், வயிற்றுப் போக்கு, மோசமான இரத்த சுழற்சி, மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் டென்சன் போன்றவை சரியாகும்.

கிராம்பு :

கிராம்பு உணவின் வாசனையை அதிகரிக்கும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது பல் பிரச்சனைகளை குணப்படுத்தும் ஒரு சிறந்த பொருளும் கூட. மேலும் அளவுக்கு அதிகமாக உணவை சாப்பிட்டோ மற்றும் ஆல்கஹால் அருந்தியோ அவஸ்தைப்படுவோர், ஒரு கிராம்பை எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் சரிசெய்துவிடும். கிராம்பு வாந்தி, செரிமானப் பிரச்சனை, வயிற்றுப் போக்கு போன்றவற்றையும் குணமாக்கும்.

கருப்பு ஏலக்காய் :

கருப்பு ஏலக்காய் புலாவ் மற்றும் பிரியாணிகளில் தான் பயன்படுத்துவார்கள். ஏனெனில் பிரியாணிகளில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதால், வயிறு உப்புசத்துடன் இருக்கும். எனவே இந்த கருப்பு ஏலக்காய் சேர்த்தால், அந்த பிரச்சனை வராமல் இருக்கும். மேலும் இந்த கருப்பு ஏலக்காய் தொண்டை பிரச்சனை, நெஞ்செரிச்சல், ஈறு பிரச்சனை போன்றவற்றிலிருந்து விடுபட வைக்கும். கருப்பு ஏலக்காய் ஆஸ்துமாவால் அவஸ்தைப்படுவோருக்கு நல்ல நிவாணம் தரும்

குங்குமப்பூ :

பொலிவான சரும அழகைத் தரும் குங்குமப்பூ, பொதுவாக நிறத்திற்காக சேர்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக பிரியாணி, இனிப்பு பதார்த்தங்கள் போன்றவற்றில் தான் பயன்படுகிறது. குங்குமப்பூ மிகவும் விலை மதிப்புள்ளது. அதற்கேற்றாற் போல், இதன் நன்மைகளும் எண்ணற்றவை. ஏனெனில் குங்குமப்பூ அழகிற்கு பயன்படுவதோடு, உடலல் நலத்தில் மன இறுக்கம், மன அழுத்தம், பார்வை கோளாறு மற்றும் ஞாபக சக்தி போன்றவற்றை சீராக வைக்கவும் உதவுகிறது

ஜாதிக்காய் :

ஜாதிக்காய், கிராம்பு போன்ற ஒரு நறுமணப் பொருள் தான். இதுவும் பல் பிரச்சனை, அல்சீமியர் போன்றவற்றை சரிசெய்வதோடு, ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது. மேலும் இது பசியின்மையை போக்கும் ஒரு சிறந்த பொருளும் கூட. பெரும்பாலும் இது நிறைய நாட்டு மருந்துகளில் பயன்படுகிறது.

பெருங்காயம் :

பெருங்காயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இது ஒரு சிறந்த வாசனைப் பொருளாக இருப்பதோடு, செரிமான மண்டலத்தில் இருக்கும் பிரச்சனையையும் சரிசெய்துவிடும் தன்மையுடையது. மேலும் இது பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளான மலட்டுத்தன்மை, தேவையற்ற கருக்கலைப்பு, குறைபிரசவம், வழக்கத்திற்கு மாறான வலி மற்றும் அதிகப்படியான இரத்தப் போக்கு போன்ற பல பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது.

இத்தகைய மசாலாப் பொருட்களை அளவாக உணவில் அவ்வப்போது சேர்த்து வந்தால், நிறைய நன்மைகளைப் பெறலாம். அதுவே நன்மை அதிகம் உள்ளது என்று அளவுக்கு அதிகம் சாப்பிட்டால், பின் செரிமானப் பிரச்சனை அல்லது சில சமயங்களில் அல்சர் போன்றவை கூட ஏற்படும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum